×

அடிமைத்தன அரசியல் நடத்திய எடப்பாடி திமுக கூட்டணியை விமர்சிக்க தகுதி கிடையாது: கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி என்பது அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. திமுக தலைமை காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது போல அதிமுக ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை.  

இந்நிலையில் கூட்டணி கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி நடத்துகிறது என்று பிரசார கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.  திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Edappadi ,DMK ,Azhagiri Thaku , Edappadi has no merit in criticizing the DMK alliance for its slavery politics: KS Azhagiri Thakku
× RELATED தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல்...